தங்கைக்கோர் …. திருவாசகம்
by Abdul Rashid
தங்கையே …!
சாலிஹான நங்கையே …!
என் உயிரிகள் நிழலே …!
நான் பேசும் தமிழை
தேன் கலந்து பேச வந்த,
தென்றலே !
ஒன்று சொல்லட்டுமா…?
கல்வியென்பது
நம் முகத்திற்குக்
கண்களைப் போன்றது !
நமக்கு,
முகவரியும் அதுதானே …!
கல்வியென்பது
நம்மை உயர்த்துவது !
குறிப்பாக …
பெண்ணை நிமிர்த்துவதென்பேன் !
கல்வியென்பது
இந்த உலகத்தைப் பார்க்க வைக்கும்
கண்ணாடி !
கல்வியென்பது
அறியாமையை அப்புறப்படுத்துவது !
கல்வியென்பது
செல்வம் !
இது எடுத்தாலும் – பிறருக்கு
கொடுத்தாலும் குறைவதில்லை !
தங்கையே …!
நீயும் அறிந்திருப்பாயே …!
கல்வி
நபிமார்களின் பொருளென்று …!
இன்னொன்றும்
தெரியுமா…?
கல்வியொன்று தான்
களவாட முடியாத செல்வம் !
கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்புயென்று
உன் ஆசிரியை சொன்னதாக
அன்று …
என்னிடம் சொன்னாயே …!
இந்த பூமியில்
மண் படிக்க
மரம் படிக்க
பெண் படிக்காதிருப்பது
பேதமையன்றோ…?
ஆம் !
தன்னுள் புதைத்த
விதைகளை
பூக்களாய், காய்களாய்
கனிகளாய் புன்னைகைக்க
மண் கற்றிருக்கும் போது,
பெண் படித்தாலென்ன…
பிழையா…?
சகோதரி !
உலகில் பேராபத்து
எது தெரியுமா…?
கல்லாமைதான் !
ஆமாம்… !
உன் பெயரை
வெறும் வாக்காளர் பட்டியலில் மட்டும்
பார்த்து விட விரும்புகிறாயா …?
அல்லது
இந்தப் புவனமே தன்
புருவத்தை உயர்த்திப் பார்க்கும்
வரலாற்றின் பட்டியலில்
பார்க்க விரும்புகிறாயா…?
வரலாற்றில் நீ
வாழ விரும்பினால்…
படி ! படி ! படி !
நீ படித்தால் … உன்னையிந்த
உலகம் படிக்கும் !
அன்று …
ஹீராவில்…
வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள்
சங்கைக்குரிய
நமதருமை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
முஹம்மதாய் இருந்தவர்க்கு,
நம் தங்கத் திருமறையின்
முதல் வாசகமாக
வசனமாக …!
இக்ர ஊரப்பிக்க யென்று
வாயசைத்துக்
கற்பித்த பொழுது … அதனைத்
திசைகளெல்லாம்…
திருப்பிச் சொன்னதாமே … !
அந்த வரிகளின் உயிரே
கல்வியின் அவசியம் பற்றித்தானே !
அன்று பத்ருப் போர்
கைதிகளில்
கற்றவர்கள், கல்லாதவர்களுக்கு
கல்வி போதித்து விட்டு
விடுதலையாகலாம் என்று
நமதருமை நாயகம் (ஸல்) அவர்கள்
அறிவுறுத்தினார்களே… !
இது உலகில்
எந்தத் தலைவர்களுக்கும்
எட்டாத சிந்தனை !
கல்விக்கு உயர்வளித்த
கல்வெட்டு வரிகளிவை !
கல்வியென்பது
இருட்டை எதிர்க்கும்
இராணுவம் !
இதையெந்தப் பூட்டுகளாகும்…
பூட்டி விட முடியாது !
ஒரு குடும்பத்தில்
பெண் படிக்கிற பொழுது,
பெருமை சேர்கிறது !
பேதமை மறைகிறது !
இன்னும் சொல்லப் போனால்…
வறுமையும் சற்று
ஒதுங்கத்தான் …செய்கிறது !
ஒரு காலத்தில் பெண்களுக்கு
கல்வி மறுக்கப்பட்ட பொழுது,
அன்றைய சமுதாயம்
இருட்டில் அல்லவா… கிடந்தது !
சகோதரி.. !
ஒரு சமுதாய விடியலுக்கான
வெளிச்சம் – வேறெங்குமில்லை !
உன்னுள் தான் இருக்கிறது !
பெண் கல்வி
கற்பதினால் தான் … இருக்கிறது !
நம் சங்கையான
இஸ்லாம் மார்க்கம்
போதிப்பது போல
கற்பவராக இரு !
அல்லது கற்பிப்பபவராக இரு !
நமது வள்ளுவப் பெருந்தகையும்
எல்லோரையும்…
கற்கத்தானே சொன்னார் !
தங்கையே ..!
ஒரு பெண்ணின் உயர்வு
சாலிஹான ஒழுக்கத்திலும்
சங்கையான கல்வியிலும் தான்
என்பதை மட்டும்
மறந்து விடாதே … !
இதுவே, உன்
அண்ணன் உனக்குக் கற்பிக்கும்
திருவாசகம் !
—
தங்கையே …! சாலிஹான நங்கையே …! என் உயிரிகள் நிழலே …! நான் பேசும் தமிழை தேன் கலந்து பேச வந்த, தென்றலே ! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்குக் கண்களைப் போன்றது ! நமக்கு, முகவரியும் அதுதானே …! கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக … பெண்ணை நிமிர்த்துவதென்பேன் ! கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்க வைக்கும் கண்ணாடி ! கல்வியென்பது அறியாமையை அப்புறப்படுத்துவது ! கல்வியென்பது செல்வம் ! இது எடுத்தாலும் – பிறருக்கு கொடுத்தாலும் குறைவதில்லை ! தங்கையே …! நீயும் அறிந்திருப்பாயே …! கல்வி நபிமார்களின் பொருளென்று …! இன்னொன்றும் தெரியுமா…? கல்வியொன்று தான் களவாட முடியாத செல்வம் ! கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புயென்று உன் ஆசிரியை சொன்னதாக அன்று … என்னிடம் சொன்னாயே …! இந்த பூமியில் மண் படிக்க மரம் படிக்க பெண் படிக்காதிருப்பது…
0 Comments
Leave a Reply Cancel reply
Recent Comments
Archives
- January 2025
- November 2024
- April 2024
- March 2024
- November 2023
- April 2023
- November 2022
- June 2022
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006
அஸ்ஸலாமு அலைக்கும். இக்கவிதையினை எழுதிய ‘பொற்கிழி கவிஞர்’ மு.ஹிதாயத்துல்லா , இளையான்குடி – அலைபேசி : 99763 72229 அவர்களுக்கும், இக்கவிதையினை நம்மோடு பகிர்ந்த சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கும், http://www.thengapattanam.net வாசகர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். – M. N. Hameed