பெருகிவ‌ரும் த‌னிப் ப‌ள்ளியும் குலையும் ஒற்றுமையும்

முன்பு ஒருக் கால‌த்தில் ஊருக்கு ஒருப் ப‌ள்ளிவாச‌ல் இருன்த‌து.அனைவ‌ரும் அதில் தொழுது வ‌ன்தார்க‌ள். ஆனால் இன்றைக்கோ, ஹனபி பள்ளி, ஷாபி பள்ளி- அஹ்லே குற் ஆன் பள்ளி- ஜாக்பள்ளி- த.த.ஜ. பள்ளி, த.மு.மு.க. பள்ளி, இ.த.ஜ. பள்ளி இப்படி ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒருபள்ளிஎன்ற அளவுக்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக்கொள்வது பற்றி மார்க்கஅடிப்படையில் கேள்வி எழுப்பினால்,

ஹனபி-ஷாபி பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளை நபிவழிப்படி தொழ அனுமதிப்பதில்லை.

”இப்பள்ளிவாசலில் மவ்லித்போன்ற ஷிர்க் கள் அரங்கேறுகிறது” என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தனிப்பள்ளி காண்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.

சில‌ அமைப்புக‌ள் ம‌த்ஹ‌பை பின் ப‌ற்றும் ப‌ள்ளிக‌ளில் தொழ‌கூடாது. மார்க்க‌ம் அனும‌திக்க‌வில்லை. என் விஷ‌ பிர‌சார‌த்தை ப‌ர‌ப்பி த‌ன் அமைப்புக்கென்று த‌னி ப‌ள்ளி க‌ட்டி குறுகிய‌ வ‌ட்ட‌த்திற்குள் இருக்கிறார்க‌ள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருந்தபோது காபாவின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம். நபியவர்கள் மக்காவெற்றியின்போது முன்னூற்றி அறுபது சிலைகளை அப்புறப்படுத்தியதையும் நாமறிவோம். முழுக்க,முழுக்க சிலைகளால் நிரம்பியிருந்த மார்க்கம் காட்ட்டிதராத சீட்டியடித்தல், நிர்வாணமாக தவாப் செய்தல், போன்ற செயல்களை குறைஷிகள் அப்புனித வீட்டில் செய்துவந்த நிலையில், நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தவரைக்கும் காபாவில்தானே தொழுதார்கள். தனிப்பள்ளி எழுப்பவில்லையே?

இன்றைக்குள்ள மத்ஹப்பள்ளிகளில் எந்த பள்ளியில் சிலையிருக்கிறது?

எந்த பள்ளியில் சீட்டியடிக்கப்படுகிறது? எந்தபள்ளியில் அவலட்சணமான ஆடை அணிந்து தொழுகை நடைபெறுகிறது?

ஆக தனிப்பள்ளி கட்டுவதற்கு பித்அத்கள் அரங்கேறுகிறது என்ற காரணம் ஏற்புடையதன்று. ஒருவாதத்திற்காக, நபிவழிப்படி தொழுவதற்காக தனிப்பள்ளி எழுப்புதல் என்பதை சரிகன்டால் கூட, ஜ‌மா அத்தே இஸ்லாமி பள்ளிவாசலோடு நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்

.

*

நபிவழியில் தொழஅனுமதிக்கும் ஜ‌மா அத்தே இஸ்லாமி பள்ளியிருக்கும் ஊரில் ஜாக் பள்ளி எதற்கு?

*

நபிவழியில் தொழ அனுமதிக்கும் ஜாக்பள்ளி இருக்கும் ஊரில் த.மு.மு.க.பள்ளி எதற்கு?

*

நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.மு.மு.க.பள்ளி இருக்கும் ஊரில் த.த.ஜ.பள்ளி எதற்கு?

*

நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.த.ஜ.பள்ளி இருக்கும் ஊரில் இ.த.ஜ. பள்ளி எதற்கு?

இப்படி அமைப்புக்கொரு பள்ளி கட்டியதிலிருந்தே, நபிவழி தொழுவது மட்டும் நோக்கமல்ல. என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும்

, சில அமைப்புகள் தங்கள் கிளை/மாவட்ட/மாநில அலுவலகங்களில் தொழுகை நடத்துவதையும் பார்க்கிறோம். பள்ளிவாசலுக்கு செல்லாமல் இப்படி அலுவலகத்திலே தொழுகை நடத்துவது சரியா என்றால்? அதற்கு ஒரு ஆதாரம் காட்டப்படும். ‘மஸ்ஜிதுன் நபவிதான் நபியவர்களின் தொழும் பள்ளியாகவும், அரசியல்,போர் உள்ளிட்ட அத்துணை விசயங்களையும் அலசும் இடமாகவும் இருந்தது’ என்பார்கள். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து/மறைத்து விடுவார்கள். அதாவது நபியவர்கள் தொழும் பள்ளிவாசலை ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தியது வேறு. பள்ளிவாசலுக்கு தொழ செல்லாமல் அலுவலகத்தையே பள்ளிவாசலாக நினைத்து தொழுவது என்பது வேறு.

எனவே

, ஒரு ஊரில் ஒருபள்ளிவாசல் இருக்கும்நிலையில், அப்பள்ளி தொழவரும் மக்களுக்கு போதுமானதாக இல்லையெனில் அதை விரிவுபடுத்தலாம். அல்லது கூடுதல் பள்ளிகளை எழுப்பிக்கொள்ளலாம். பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளமக்கள் வக்துக்கு வரமுடியாத நிலையிருந்தால் விரும்பினால்,கூடுதல் பள்ளிகளை எழுப்பலாம்.[அழகான முறையில் ஒழுசெய்து தொழுகைக்காக பள்ளியை நோக்கி நடந்துவந்தால் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்ற நபிமொழியும் உண்டு] வேறு எதற்காகவும் பள்ளிவாசலை கட்டிக்கொண்டு பிரிவதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை.

தமிழகத்தில் அமைப்புக்கொரு பள்ளிவாசல் எழுப்பப்படுவதை பற்றிய தொடரின் இறுதிப்பகுதி; தனிப்பள்ளியை சரிகான்பவர்கள், பித்’அத் அரங்கேறும் பள்ளிவாசலில் எங்களை தொழ சொல்கிறீர்களா ? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பித்’அத் அரங்கேறுவதால் ஒரு பள்ளி தொழுவதற்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது. எனவே, தனிப்பள்ளியே தீர்வு எனில், புனித மக்காவிலும்- புனித மதீனாவிலும் உள்ள காபா மற்றும் மஸ்ஜிதுன்நபவியில், ஜும்மாவிற்கு இருபாங்குகள், தராவீக் இருபத்து ரக்’அத்துகள் போன்ற பித்’அத்கள் அரங்கேறுகிறது. அப்படியாயின் அந்த இரு புனிதபள்ளிகளும் தொழுவதற்கான தகுதியை இழந்துவிட்டது என கூறவருவார்களா?

[அஸ்தஃபிருல்லாஹ்]

இரு புனித பள்ளிகளும் தகுதியிழந்து விட்டதால், இந்த ‘தனிப்பள்ளிவாதிகள்’ அங்கேயும் தனிப்பள்ளி எழுப்புவார்களா? ‘தனிப்பள்ளிவாதிகள்’ ஹஜ்- அல்லது உம்ரா சென்றால் இந்த பித்’அத்அரங்கேறும் பள்ளியில் தொழுவார்களா? அல்லது வேறு எங்காவது தொழுவார்களா? என்ற கேள்விக்கு பதிளில்லை. அடுத்து, சு.ஜ. பள்ளிகளில்தான் நபிவழிப்படி தொழுவதை தடுக்கிறார்கள் என்றுவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஒரு ஊரில் நபிவழிப்படி தொழ அனுமதிக்கும் பள்ளியிருக்கும்போது, அமைப்புக்கொரு பள்ளி ஏன்?

ப்ரிய‌முட‌ன்

அன்ஸி

முன்பு ஒருக் கால‌த்தில் ஊருக்கு ஒருப் ப‌ள்ளிவாச‌ல் இருன்த‌து.அனைவ‌ரும் அதில் தொழுது வ‌ன்தார்க‌ள். ஆனால் இன்றைக்கோ, ஹனபி பள்ளி, ஷாபி பள்ளி- அஹ்லே குற் ஆன் பள்ளி- ஜாக்பள்ளி- த.த.ஜ. பள்ளி, த.மு.மு.க. பள்ளி, இ.த.ஜ. பள்ளி இப்படி ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒருபள்ளிஎன்ற அளவுக்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக்கொள்வது பற்றி மார்க்கஅடிப்படையில் கேள்வி எழுப்பினால், ஹனபி-ஷாபி பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளை நபிவழிப்படி தொழ அனுமதிப்பதில்லை. ”இப்பள்ளிவாசலில் மவ்லித்போன்ற ஷிர்க் கள் அரங்கேறுகிறது” என்பன…

0 Comments

  1. இன்று பெரும்பாலான அமைப்புக்களும் பணத்திற்காக வேண்டித்தான் செயல் படுகின்றன..அதனால் தான் அவர்களுக்குள் ஒற்றுமையை காண முடிவதில்லை. மற்றுள்ளவரை பற்றி அவதூறு பரப்பி வாழும் வாழ்கையை விட்டு விட்டாலே ஒருவனுடைய பகுதி பாவமும் குறைந்து விடும். நம்முடைய சமுதாயத்தின் நிலை..மாற்று மதத்தினரைப் போல் பணத்துக்காகவும், செல்வாக்கிர்காகவும் சுயநலமாக வாழும் ஒரு அற்ப நிலையை நாம் இன்று காண முடிகிறது..நபி பெருமானார் காட்டித்தந்த வழியில் பெரும்பாலானவர் வாழவில்லை. வீட்டுக்கு ஒரு சொல் ஊருக்கு ஒரு சொல், தெருவுக்கு ஒரு சொல். இன்று இதுதான் நிலை.மறுமையின் கேள்விகளுக்கு பதில் என்ன கொடுக்கப்போகிறோம்? சிந்திப்போம்.
    அல்லாமல் தெருவுக்கு ஒரு பள்ளி கட்டி தொழுவதற்கு ஆளே இல்லாமல்..அதை ஒரு கண்காட்சியாக வைப்பதில் கேடுதான் உண்டாகுமே தவிர எந்த ஒரு நன்மையையும் இல்லை.. முடிந்த அளவிற்கு நன்மை செய்யுங்கள்.. முடிந்த அளவிற்கு தீமையை தடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *