இப்ராஹீம் நபி பொய் சொன்னாரா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

குரானின் இன்றைய மொழிபெயர்ப்புகள் என்னை ஆச்சர்யம் அடைய செய்கிறது. அதிகமான விசயங்களில் நம்பிக்கை வைத்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. மொழியாக்கம் செய்து விட்டு பின் அது சொல்வதை வைத்து தானே நம்பிக்கை பிறக்க வேண்டும். அப்படி பட்ட பல விசயங்களில் ஒன்றான இப்ராஹீம்(அலை) அவர்கள் பொய் சொன்னதாக பயான் செய்து கொண்டிருக்கும் பள்ளி வாசல்களும், அதை தவறாக புரிந்து கொண்ட மார்க்க அறிஞர்களும் சொல்லவதை ஆய்வு செய்வோம்.

 

இப்ராஹீம்(அலை) அவர்கள் சின்ன சிலைகளை உடைத்தார்.
அவர் கோடாலியை பெரிய சிலையின் தோளில் தொங்க விட்டார். ?
உடைத்தது யாரென்று அவரிடம் கேட்க பட்டதும் அவர் அதை தான் உடைக்கவில்லை என்று மறுத்தார்? அவர் அந்த பழியை பெரிய சிலை மீது சுமத்தினார்.?

குரானின் கூற்று:

இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாவிற்கு மிக நெருக்கமானவர், நண்பர் என்று கூட
சொல்லும் அளவிற்கு அந்தஸ்த்தில் உயர்த்தப்பட்டவர். அவருக்கு அளிக்கப்பட்டது
தான் கியாமத் வரையிலும்  மார்க்கம். மார்க்க தந்தை அவர் தான். அவரது குடும்பம்
பட்ட சிரமம் தான் இன்று ஹஜ் என்ற ஒரு வணக்கமாகவே ஆனது. அவரது வழி முறையில் தான் பெரும்பாலான நபி மார்கள் வந்துள்ளனர். இத்தனை சிறப்பும் அவர் பெற்றிருக்க அவர் பொய் சொன்னார் என்பது நெருடள்ளக தெரியவில்லையா? இதை வேண்டும் என்றே அவர் மீது பழி சுமத்த யாரும் சொல்லவதில்லை என்பது உண்மை, ஆனால் அறியாமை தான் காரணம்.

இனி சூரா 21 : 63 இல் வருவதை படிப்போம்.

அரபு : கால – அவர் சொன்னார்
பல் – ஆனால், rather , ofcourse, indeed 
fபஹ்லஹு – யாரோ ஒருவர் செய்துள்ளார் (passive participle ) someone did  it கபிருஹும் – இவைகளில்  பெரியது 
ஹ்சா – இதை fபாசாளுஹும் – கேளுங்கள், விசாரியுங்கள் இன் – ஒருவேளை , if 
கான எந்திகூன் – அவர்களால் பேச முடிந்தால்

இதில் faalahu என்ற அரபு வார்த்தையில் ஒரு சின்ன (waqf ) வந்துள்ளது.
இது ஆங்கிலத்தில்  போடும் “கமா, , ” வை போன்றது. அந்த இடத்தில் நிறுத்த
வேண்டும். இதற்கு  பின் உள்ள வசனம் அல்லது வார்த்தை  அதற்கு பதில் சொல்கிறது என்று கொள்ளவேண்டும்.
இனி பல மொழி பெய்ரபுகளை பாப்போம்
அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான்
செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள்
கேளுங்கள்” என்று கூறினார் – ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு.

அதற்கவர் “இல்லை ! அவற்றில் பெரிய சிலையே இப்படி செய்தது அவை பெசகூடியவைகலாக இருந்தால் அவற்றிடமே விசாரித்து கொள்ளுங்கள்” – பி. ஜெ அவர்களின் மொழி பெயர்ப்பு.

Al-Hilali & Muhsin Khan:  (Abraham) said: “Nay, this one, the biggest of
them (idols) did it. Ask them if they can speak!”

Yusuf Ali: He said: “Nay, this was done by this The biggest one! Ask them if
they can talk.”

Rashad Khalifa: He said, “It is the big one who did it. Go ask them, if they
can speak.”

J.M. Rodwell: He said: “Nay, that their chief hath done it; but ask ye them,
if they can speak.”

T.B. Irving: He said, “Rather the biggest one of them did it. Ask them if
they are able to speak up.”

Ahmad Ali: “No”, he said, “It was done by that chief of theirs. Ask him in
case they can speak.”

Muhammad Sarwar: I think the biggest one of them has broken the smaller
ones. Ask them if they are able to speak.

N.J. Dawood: ‘No’, re replied, ‘It was their chief who smote them. Ask them
if they can speak.’

Muhammad Asad: He answered: “Nay, it was this one, the biggest of them, that
did it; but ask them [yourselves] – provided they can speak.”

Pickthall: He said: But this, their chief hath done it. So question them, if
they can speak.

மேலுள்ள அரபு வசனத்தில் எந்த இடத்திலும் “இல்லை” என்ற வார்த்தை இல்லை. அப்படி இருக்க பலர் இப்படி மொழியாக்கம் செய்தது வருத்தம் அளிக்கிறது. அந்த “இல்லை” என்ற ஒரு வார்த்தை அவர்   பொய் சொன்னது போல் ஆகிறது.   அவர் அந்த சிலையின் மீது பழியை போட்டது போல் தோற்றம் அளிக்கிறது. அவர் இதை அவர்கள் சிலை பேசாது  என்பதை உணர்வதற்காக தான் அப்படி அவர் செய்தார் என்று விளக்கம் அளித்தாலும் அவர் சொல்லாததை சொல்வது முறையல்ல என்பது என் கருத்து. பொய் சிரியாதாக இருந்தாலும் பொய் பொய் தான். அதுவும் இது நபியின் விஷயத்தை பற்றியது.

அவர் சொன்னதில் பொய் ஏதும் இல்லை. ,

நிராகரிப்பாளர்கள் அவரிடம் சிலையை உடைத்தது பற்றி இப்படி கேட்கின்றனர்,

21:62. “இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று
(அவர் வந்ததும்) கேட்டனர்.

அதற்கு அவர் சொன்னது ” யாரோ செய்தார்கள் (someone did it ) , ” இதனால் அவர் பொய்யேதும் சொல்லவில்லை. இதை ஒருவர் செய்ததை மறுக்கவில்லை.

” அவைகள் பேசினால் அந்த  பெரிய சிலையிடம் கேட்டுகொள்ளுங்கள் ” – அவர் யார்
என்று சொல்ல தான் மறுத்தார் அதுமட்டுமின்றி பெரிய சிலையிடம் விசாரியுங்கள்
என்று இதன் மூலம் சிலைகள் பேச கூட சக்தி பெறாதது என்பதையும் உணர்த்தினார்.

மொழி பெயர்த்த யாரும் இதை வேண்டும் என்றே மொழிபெயர்த்ததாக குற்றம் சொல்லவில்லை. அவர்கள் எல்லாம் மிக சிறந்த அறிஞர்கள், இருந்தும் மனிதன் என்ற முறையில் அவர்களிடம் உள்ள  சிறு சிறு தவறுகளை அவர்களுக்கு சுட்டி காட்டுவது நம் கடமை. குரானில் ஒரு சிறு வார்த்தை மூலமாவது குறை சொல்ல வேண்டும் என்று எதிரிகள் தேடி கொண்டிருக்கும் காலத்தில் நாம்  அதற்கு எந்த காலத்திலும் வழி செய்து கொடுக்க கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் தான் சொல்கிறேன். முடிந்த அளவு இதை பரப்பவும்.  வசலாம்.

நன்றி
அன்பு சகோதரன் ,
நௌஷாத் அலி முஹம்மது

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி
குவைத்

அஸ்ஸலாமு அலைக்கும், குரானின் இன்றைய மொழிபெயர்ப்புகள் என்னை ஆச்சர்யம் அடைய செய்கிறது. அதிகமான விசயங்களில் நம்பிக்கை வைத்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. மொழியாக்கம் செய்து விட்டு பின் அது சொல்வதை வைத்து தானே நம்பிக்கை பிறக்க வேண்டும். அப்படி பட்ட பல விசயங்களில் ஒன்றான இப்ராஹீம்(அலை) அவர்கள் பொய் சொன்னதாக பயான் செய்து கொண்டிருக்கும் பள்ளி வாசல்களும், அதை தவறாக புரிந்து கொண்ட மார்க்க அறிஞர்களும் சொல்லவதை ஆய்வு செய்வோம்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *